2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டோக்கியோ 2020: தங்கம் வென்றதாக தவறுதலாக நினைப்பு

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 26 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான வீதி சைக்கிளோட்டத்தில் வென்றதாக நினைத்து எல்லைக் கோட்டைத் தாண்டும்போது நெதர்லாந்தின் அனெமிக் வான் வுளூட்டன் கைகளை உயர்த்தியவாறு சென்றுள்ளார்.

எவ்வாறெனினும், இப்போட்டியில் வுளூட்டன் உட்பட ஏனைய வீராங்கனைகளிலிருந்து வெகு தூரத்தில் சென்று கொண்டிருந்த அன்னா கிஷன்ஃபோகரை வுளூட்டன் அறிந்திருக்காத நிலையில், அவர் வுளூட்டனுக்கு 75 செக்கன்கள் முன்பதாகவே போட்டித் தூரத்தை முடித்து ஏற்கெனவே தங்கப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.

அந்தவகையில், வெள்ளிப் பதக்கத்தையே வுளூட்டன் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .