2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

தனதிடத்தை நியாயப்படுத்துவாரா கோலி?

Mithuna   / 2024 ஜனவரி 12 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, மொஹாலியில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

கடந்த இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் முதற்தடவையாக அணித்தலைவர் றோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், ரிங்கு சிங் உள்ளிட்ட வீரர்களின் எழுச்சிகளுக்கு மத்தியில் வேகமாகத் துடுப்பெடுத்தாடி தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையில் கோலி காணப்படுகின்றார்.

ஏனெனில் குழாமுக்கு வெளியேயும் இஷன் கிஷன், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் காணப்படுகின்ற நிலையில் இவ்வாண்டு இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்பதாக இத்தொடரே இந்தியாவுக்கு இறுதியானதாகக் காணப்படுகின்றது.

மறுபக்கமாக காயம் காரணமாக ரஷீட் கான் இல்லாதபோதும் மொஹமட் நபி, முஜீப் உர் ரஹ்மான், பஸல்ஹக் பரூக்கி, நவீன்-உல்-ஹக், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், நஜிபுல்லாஹ் ஸட்ரான், ஹஸரத்துல்லா ஸஸாய் என பலமானதாகவே ஆப்கானிஸ்தான் காட்சியளிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X