Editorial / 2019 நவம்பர் 11 , பி.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நேற்றிரவு ஆரம்பித்த தொழில்முறை டென்னிஸ் வீரங்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் ஐந்தாம்நிலை வீரரான டொமினிக் தியெமிடம், உலகின் மூன்றாம்நிலை வீரரான றொஜர் பெடரர் தோற்றிருந்தார்.
இன்று அதிகாலை நடைபெற்ற பியொன் பொரி குழுவின் இரண்டாவது போட்டியில், 5-7, 5-7 என்ற நேர் செட்களில் ஒஸ்திரியாவின் டொமினிக் தியெமிடம் சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தோல்வியடைந்திருந்தார்.
இதேவேளை, நேற்றிரவு நடைபெற்ற பியொன் பொரி குழுவின் முதற்போட்டியில், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் உலகின் எட்டாம்நிலை வீரரான இத்தாலியின் மட்டியோ பெரெட்டினியை உலகின் இரண்டாம் நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் வென்றிருந்தார்.
உலகின் முதல் எட்டு வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரில் மற்றைய அன்ட்ரே அகாஸி குழுவில், உலகில் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால், நான்காம்நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடெவ், ஆறாம்நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், ஏழாம்நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
4 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
27 Jan 2026