Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
செஞ்சூரியனில் நேற்று நடைபெற்ற மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் மூன்றாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பக்கர் ஸமன் 101 (104), பாபர் அஸாம் 94 (82), இமாம்-உல்-ஹக் 57 (73), ஹஸன் அலி ஆட்டமிழக்காமல் 32 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கேஷவ் மஹராஜ் 3, ஏய்டன் மர்க்ரம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 321 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா சார்பாக, ஜனமென் மலன் 70 (81), கைல் வெரைனே 62 (53), அன்டிலி பெக்லுவாயோ 54 (61) ஓட்டங்களைப் பெற்றபோதும், குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 28 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், மொஹமட் நவாஸ், ஷகீன் ஷா அஃப்ரிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹரிஸ் றாஃப் 2, உஸ்மான் குவாதிர் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக பாபர் அஸாமும், தொடரின் நாயகனாக பக்கர் ஸமனும் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago