Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 03 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்ற இந்தியா, கெளஹாத்தியில் நேற்றிரவு நடைபெற்ற குறித்த போட்டியில் வென்றதன் மூலம் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரைக் கைப்பற்றியது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்காவின் அணித்தலைவர் தெம்பா பவுமா, இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்திருந்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, லோகேஷ் ராகுலின் 57 (28), அணித்தலைவர் றோஹித் ஷர்மாவின் 43 (37), விராட் கோலியின் ஆட்டமிழக்காத 49 (28), சூரியகுமார் யாதவ்வின் 61 (22), தினேஷ் கார்த்திக்கின் ஆட்டமிழக்காத 17 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், கேஷவ் மஹராஜ் 4-0-23-2 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு 238 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, ஆரம்பத்திலேயே பவுமா, றீலீ றொஸோவை அர்ஷ்டீப் சிங்கிடம் இழந்தது. சிறிது நேரத்தில் ஏய்டன் மார்க்ரமையும் 33 (19) ஓட்டங்களோடு அக்ஸர் பட்டேலிடம் இழந்தது.
இதைத் தொடர்ந்து வந்த டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 106 (47). குயின்டன் டி கொக் ஆட்டமிழக்காமல் 69 (48) ஓட்டங்களைப் பெற்றபோதும் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களையே பெற்ற தென்னாபிரிக்கா 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், தீபக் சஹர் 4-1-24-0 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக ராகுல் தெரிவானார்.
23 minute ago
26 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 minute ago
40 minute ago