2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பண்ட்க்கு கொரோனா

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 15 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் குழாமில் இடம்பெற்றுள்ள விக்கெட் காப்பாளர் றிஷப் பண்ட்க்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த எட்டு நாள்களாக பண்ட் தனிமைப்படுத்தலில் உள்ளதாக இந்திய கிரிக்க்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தகவல் மூலம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வேறுவரும் பாதிக்கப்படவில்லை என கட்டுப்பாட்டுச் சபையின் உப தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரண்டு வீரர்கள் தொற்றுக்குள்ளானதாகவும், ஒருவருக்கு பின்னர் தொற்று இல்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஒருவரது தனிமைப்படுத்தல் ஞாயிற்றுக்கிழமை முடிவடைவதாக ஏ.என்.ஐ செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .