2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்றில் ஒஸாகா, ஹலெப்

Editorial   / 2019 மே 29 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியிருந்த நிலையில், உலகின் முதல்நிலை வீராங்கனையான நயோமி ஒஸாகா, மூன்றாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப் ஆகியோர் இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு நேற்று  தகுதிபெற்றிருந்தனர்.

தனது முதலாவது சுற்றுப் போட்டியில் அன்னா கரோலினா ஷ்மிடிலோவாவை எதிர்கொண்ட ஜப்பானின் நயோமி ஒஸாகா, முதலாவது செட்டை 0-6 என்ற கணக்கில் இழந்தபோதும், 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் அடுத்த இரண்டு செட்களையும் போராடி வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், தனது முதலாவது சுற்றுப் போட்டியில் குரோஷியாவின் அஜ்லா டொம்லஜனோவிச்சை எதிர்கொண்ட நடப்புச் சம்பியனான றோமானியாவின் சிமோனா ஹலெப், 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்று  இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஜோன் மில்மானை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 7-6 (7-4), 6-3, 2-6, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற தனது முதலாவது சுற்றுப் போட்டியில் சிலியின் நிக்கொலஸ் ஜரியை எதிர்கொண்ட உலகின் ஒன்பதாம் நிலை வீரரான ஜுவான் மார்டின் டெல் போத்ரோ, 3-6, 6-2, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .