Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் தோற்றது.
பொலொக்னா சார்பாகப் பெறப்பட்ட கோலை றிக்கார்டோ ஒர்சோலினி பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் திங்கட்கிழமை (21) அதிகாலை நடைபெற்ற அத்லாண்டாவுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் தோற்றது. அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை எடெர்சன் பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் இன்டரும், நாப்போலியும் தலா 71 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான போட்டி முடிவுகளின்படி முறையே முதலாம், இரண்டாமிடங்களில் காணப்படுகின்றன. 64 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 60 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் பொலொக்னாவும் காணப்படுகின்றன.
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago