2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பொலொக்னாவிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் தோற்றது.  

பொலொக்னா சார்பாகப் பெறப்பட்ட கோலை றிக்கார்டோ ஒர்சோலினி பெற்றிருந்தார்.  

இதேவேளை தமது மைதானத்தில் திங்கட்கிழமை (21) அதிகாலை நடைபெற்ற அத்லாண்டாவுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஏ.சி மிலன் தோற்றது. அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை எடெர்சன் பெற்றிருந்தார்.  

சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் இன்டரும், நாப்போலியும் தலா 71 புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் அவற்றுக்கிடையேயான போட்டி முடிவுகளின்படி முறையே முதலாம், இரண்டாமிடங்களில் காணப்படுகின்றன. 64 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும், 60 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் பொலொக்னாவும் காணப்படுகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .