2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

றொஸ் டெய்லர் அதிருப்தி

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 10 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிக் குழாமில் சேர்க்கப்படாமை குறித்து, நியூசிலாந்து அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் றொஸ் டெய்லர், தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது போட்டியில், டெய்லரின் 4ஆம் இலக்கத்தில், கொரி அன்டர்சன் துடுப்பெடுத்தாடியதோடு, அதிரடியாக ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களையும் பெற்றார்.

எனினும், இருபதுக்கு-20 அணியில் சேர்க்கப்படாமை ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்த டெய்லர், 3 வகையான போட்டிகளிலும் விளையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். தேர்வாளர்களின் முடிவை மதிக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட டெய்லர், எனினும் உள்ளூர் தொடரில், 80க்கு அதிகமான 2 ஓட்டங்களைப் பெற்று, தன்னை வெளிப்படுத்தியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .