Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான இளைஞர் டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, சரித் அசலங்கவின் இரட்டைச் சதத்தின் (200) துணையோடு 347 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஷடப் கான் 6, சாய்ப் அலி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், உமைர் மசூத்தின் சதத்தின் (102) உதவியுடன் 209 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அசித்த பெர்ணான்டோ, லஹிரு குமார, திலான் நிமேஷ் மூவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
மீண்டும் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, அவிஷ்க பெர்ணான்டோ (64), ஷம்மு அஷன் (ஆ.இ 54) ஆகியோரின் அரைச்சதங்கள், சலிந்து உஷானின் 49 ஓட்டங்களின் துணையோடு 3 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றது.
350 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 40.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களுடன் காணப்பட்ட போது, போட்டி முடிவுக்கு வந்தது. அவ்வணியின் ஸீஷன் மலிக், 55 ஓட்டங்களைப் பெற்றார்.
5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026