Editorial / 2017 ஜூன் 30 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்நாட்டுக் கிரிக்கெட் சபைக்கும் இடையிலான, ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இணக்கப்பாடு ஏற்படாது விட்டாலும், அங்கிகரிக்கப்படாத கிரிக்கெட் போட்டிகளில், அவ்வீரர்கள் பங்குபற்ற முடியாது என, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அவ்வாறு பங்குபற்றினால், 6 மாதங்களுக்குத் தடை விதிக்கப்படுமெனவும் அச்சபை எச்சரித்துள்ளது.
வீரர்களின் ஒப்பந்தம், நாளையுடன் காலாவதியாகும் நிலையில், புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிட்டால், கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தின் கீழில்லாத வீரர்களாக, அவர்கள் மாறுவர்.
எனினும், வீரர்களுக்கு மின்னஞ்சலொன்றை அனுப்பி வைத்துள்ள கிரிக்கெட் சபையின் திறமை வெளிப்பாட்டு முகாமையாளர் பற் ஹொவார்ட், இந்த எச்சரிக்கையை வழங்கியுள்ளார்.
நாட்டின் கிரிக்கெட் சபையினால் அங்கிகரிக்கப்படாத போட்டிகளில் பங்குபற்றினால், குறைந்தது 6 மாதங்களுக்கு அவர்கள் தடை செய்யப்பட வேண்டும் என, சர்வதேச கிரிக்கெட் சபையின் விதிமுறையை அவர் ஞாபகப்படுத்தினார்.
அத்தோடு, வெளிநாடுகளில் இடம்பெறும் இருபதுக்கு-20 தொடர்களில் வீரர்கள் பங்குபற்றுவதற்கான, அனுமதிச் சான்றிதழை வழங்குவது குறித்து, ஒவ்வொரு வீரரின் நிலைக்கும் ஏற்ப முடிவெடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான, சரித்திரபூர்வமான கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடர், இவ்வாண்டு நவம்பரில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, ஆஷஸ் தொடரில் அவர்கள் பங்குபற்ற முடியாது என விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago