2025 ஜூன் 28, சனிக்கிழமை

வெளியேற்றப்பட்ட நடப்புச் சம்பியன் நடால்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 12 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, நடப்புச் சம்பியனான ரஃபேல் நடால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற தனது அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சை எதிர்கொண்ட மூன்றாம் நிலை வீரரான ஸ்பெய்னின் நடால், 6-3, 3-6, 6-7 (4-7), 2-6 என்ற செட் கணக்கில் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, தனது அரையிறுதிப் போட்டியில், உலகின் ஆறாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை எதிர்கொண்ட ஐந்தாம் நிலை வீரரான கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .