Shanmugan Murugavel / 2021 ஜனவரி 15 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய சுப்பர் கிண்ணத் தொடரிலிருந்து றியல் மட்ரிட் வெளியேற்றப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை நடந்த அத்லெட்டிக் பில்பாவோவுடனான அரையிறுதிப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே தொடரிலிருந்து றியல் மட்ரிட் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஸ்பானிய லா லிகா புள்ளிகள் பட்டியலில் முதலாமிடம், இரண்டாமிடம் பெற்ற அணிகளும், விலகல் முறையிலான கோப்பா டெல் ரே தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய அணிகளும் இத்தொடரில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .