2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஸ்டோக்ஸின் அபராதம் குறித்து குக் கடுப்பு

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில், நடுவர்களின் பணிப்புரைகளை ஏற்க மறுத்தார் என்ற குற்றச்சாட்டில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டமை குறித்து, அவ்வணித் தலைவர் அலஸ்டெயர் குக், தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மானுடன், வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஸ்டோக்ஸை, அதை நிறுத்துமாறு கோரப்பட்டதோடு, அணித்தலைவர் குக்குக்கும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கேற்ப அவர் நடக்கவில்லையென முறையிடப்பட்டது. இதையடுத்து, ஸ்டோக்ஸின் ஊதியத்தின் 15 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டது.

எனினும், இந்த விடயத்தில், நடுவர்கள் தேவையன்று நுழைந்ததாக, குக் தெரிவித்துள்ளார். "சபீரும் ஸ்டோக்ஸும், போட்டித்தன்மை வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள். என்னைப் பொறுத்தவரை, மக்கள் அதை விரும்புகிறார்கள். அதைத் தான் மக்கள் பார்க்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .