Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 10 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய தகுதிகாண் போட்டிகளில், ஹங்கேரியில் இன்று அதிகாலை நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது.
போர்த்துக்கல் சார்பாக பெர்ணார்டோ சில்வா, கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜோவா கான்செலோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஹங்கேரி சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் பார்னபஸ் வர்கா பெற்றிருந்தார்.
இதேவேளை தம்நாட்டில் நடைபெற்ற ஐஸ்லாந்துடனான போட்டியை 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது. பிரான்ஸ் சார்பாக கிலியான் மப்பே, பிராட்லே பார்கொலா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும், ஐஸ்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்றி குவஜோன்சன் பெற்றார்.
இந்நிலையில், சேர்பியாவில் நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியை 5-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.
14 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
43 minute ago
1 hours ago