2026 மே 04, திங்கட்கிழமை

முச்சக்கர வண்டியில் 3 பேருக்கு மேல் ஏற்றினால் நடவடிக்கை: பொலிஸார்

Super User   / 2013 மார்ச் 10 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.நூர்தீன்


முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்தில் மூன்று பேருக்கு மேல் ஏற்றினால் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பர் என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க தெரிவித்தார்.

காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதி நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த மாநாடு சங்கத்தின் தலைவர் அபூ பஸல் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை  நடைபெற்ற வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"முச்சக்கர வண்டிகளில் அதிகளவான பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. முச்சக்கரவண்டிகளில் மூன்று பேருக்கு மேல் ஏற்றிச் செல்லக் கூடாது. வீதி ஒழுங்கை சரியாக பின் பற்றல் வேண்டும் வீதி ஒழுங்கை சரியாக பின் பற்றினால் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

காத்தான்குடியிலுள்ள அனைத்து சாரதிகளுக்கும் விரைவில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூலம் ஒரு நாள் செயலமர்வை நடாத்த திட்டமிட்டுள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.என்.முபீன் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளன தலைவர் மர்சூக் அகமது லெவ்வை, காத்தான்குடி முச்சக்கர வண்டி சாரதி நலன்புரி சங்கத்தின் செயலாளர் மௌலவி ஏ.பி.எம்.நிஹார் மற்றும் பொருளாளர் ஏ.கலீலுர் றஹ்மான் உட்பட அதன் உறுப்பினர்கள் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • Mohanmed Hiraz Sunday, 10 March 2013 03:00 PM

    முதல்ல பஸ்ஸிலையும் புகையிரதத்திலும் ஆசனத்திட்கு அதிகமாக ஆடுமாடுகளைபோல் மனிதர்களை அடைத்து பயணிகளிடம் ஒரே தடவையில் கொள்ளை இலாபமீட்ட போக்குவரத்து சேவை நடத்தும் தனியார், அரச போக்குவரத்து கம்பனிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கலாமே???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .