2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

வீடு உடைக்கப்பட்டு 80 ஆயிரம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                        (ரி.லோஹித்)
மட்டக்களப்பு எல்லை வீதியில் உள்ள வீடு ஒன்று இன்று புதன்கிழமை உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த சுமார் 80ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்;கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, எல்லை வீதியிலுள்ள கடையொன்றுக்கு பின்னால் உள்ள வீட்டிலேயே இக்கொள்ளை நடைபெற்றுள்ளது.

வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்ற வேளை வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே நுழைந்தவர்கள் மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி, ஆகியவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ரி.சாந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில், மட்டக்களப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .