2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் 23 பேருக்கு வாழ்வாதார உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 23 பேருக்கு வாழ்வாதாரத்திற்கான உபகரணங்கள் புதன்கிழமை (12) வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் நிதியொதுக்கீட்டின் கீழ்,  தலா 32,500 ரூபா பெறுமதியான தைய்யல் இயந்திரம் 11 பேருக்கும் தலா 20,000 ரூபா பெறுமதியான மா அரைக்கும் இயந்திரம் 04 பேருக்கும் தலா 15,000 ரூபா பெறுமதியான பாய் பின்னும் உபகரணம் 04 பேருக்கும் தலா  20,000 ரூபா பெறுமதியான சிற்றுண்டிகள் தயாரிக்கும் உபகரணம் 04 பேருக்கும் வழங்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X