2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 இடங்களில் 8 மணிநேர மின்வெட்டு

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                              (எம்.சுக்ரி)
மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள்  காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 27 இடங்களில் எதிர்வரும் 3 ஆம்  திகதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எட்டு மணி நேர மின்வெட்டு இடம்பெறுமென இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிரதேச மின்பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், மண்டூர், வெல்லாவெளி, கோயில்போரதீவு, பொறுகாமம், பழுகாமம், முனைக்காடு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, திக்கோடை, அரசடித்தீவு, தும்பங்கேணி, தாந்தாமலை, அம்பிளாந்துறை, எருவில், குறுமண்வெளி, பெரியகல்லாறு, கோட்டைக்கல்லூறு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா மற்றும் மண்முணை ஆகிய பிரதேசங்களில் இம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் கும்புறுமூலை சந்தி முதல் பாசிக்குடா வரையுள்ள பிரதேசங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை 8 மணி நேர மின்வெட்டு இடம்பெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .