2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 1634 மில்லியன் ரூபாய் செலவில் மீன்பிடித்துறை அபிவிருத்தி

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                             (ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சின் அனுசரணையுடன் கடந்த நான்கு ஆண்டுகளில் 1634 மில்லியன் ரூபாய் செலவில் மீன்பிடித்துறையில் பாரிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

430 மில்லியன் ரூபாய் செலவில் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாலமீன்மடு, வாகரை, காத்தான்குடி, களுவண்கேணி, கல்லாறு ஆகிய இடங்களில் மீன்பிடி இறங்கு துறைகள் 380 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் திவிநெகும திட்;டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு செயலமர்வுகளும் நடாத்தப்பட்டுள்ளதுடன் மீனவர்களுக்காண மண்ணெண்ணெய் மானியமும் பலமில்லியன் ரூபாய் செலவில் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில்  சுமார் 24 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .