2025 மே 07, புதன்கிழமை

“கிழக்கு மாகாணத்தில் எந்த வித முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை”

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

கிழக்கு மாகாணத்தில் கடந்த 25 வருட காலத்துக்குள் எந்த வித முதலீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. பிறிமா, டோக்கியோ சீமெந்து ஆகிய முதலீடுகளைத் தவிர திருகோணமலையிலிருந்து பொத்துவில் வரையில், எந்தவிதமான பாரிய முதலீடுகள் இல்லாமல் கிழக்கு மாகாணம் திட்மிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ள வரலாற்றை ஜனாதிபதி மாற்ற வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் புதிதாகக் கட்டப்பட்ட நோயாளர் விடுதி திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இவ்விடையம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் முதலீட்டுக்குப் பொறுப்பான மலிக்சமரவிக்கிரம ஆகியோருடன் கிழக்கில் முதலீடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தின் முதலீடுகள் தொடர்பிலும் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் தெளிவாகப் பேசியிருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பொதுவாக ஆளணிப்பற்றாக்குறை நிலவி வருகின்றது. இவ்வாறான பற்றாக்குறைகளைத் தீர்த்து வைக்கின்ற பொறுப்பு அரசியல்வாதிகளாகிய எங்களுக்கு உள்ளது.

எனவே, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறைகளை மிகக் குறுகிய காலத்துக்குள் நாங்கள் தீர்த்து வைப்போம்.

வைத்தியத்துறை என்பது ஒரு கிராமத்தினுடைய இதயமாக இயங்க வேண்டியதாகும். இதனை யாரும் மறுக்க முடியாது. ஜனாதிபதி கடந்த காலத்தில் சுகாதார அமைச்சராக இருந்தவர் என்ற காரணத்தினாலும் கிழக்கில் சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணிப் பாற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய ஜனாதிபதியுடன் பேசி இவற்றுக்குத் தீர்வு காண்போம்.

செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாவைக்கு மிகவும் அவசியமாகவுள்ள பிரேத அறையை கிழக்கு மாகாணசபையினூடாக கட்டித்தரப்படும் என்பதோடு இவ்வைத்தியசாலையில் காணப்படும் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தருவேன் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X