2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 28 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சிமன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான செயலமர்வொன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் புன்னியமூர்த்தி உட்பட அதிகாரிகள் விரிவுரைகளை நடாத்தினர்.

இச்செயலமர்வில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்கள் பிரதி தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .