2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

வெள்ளத்தினால் பாதிப்புற்ற விவசாய அமைப்புக்களுக்கு உழவு இயந்திரங்கள் வழங்கிவைப்பு

Kogilavani   / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திர)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிப்புற்ற விவசாய அமைப்புக்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் இருசக்கர உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

பட்டிப்பளை, வவுணதீவு, போரதீவுப்பற்று ஆகிய பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிறிநாராயணன், சுடர்ஓளி, சுரவணையடியூற்று, சித்திவினாயகர், நாற்பதுவட்டை, தாந்தாவட்டை, பண்டாரியாவெளி, கையிலிமடு கிழல், வாதக்கல்மடு, பொன்னாங்கண்ணிச்சேனை ஆகிய விவசாய சங்கங்களுக்கே இன்று இவ் உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் த. வசந்தராச தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜெகத் அபேசிங்க, பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .