2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பாலமுனை மீனவர்களுக்கு தோணி வலை வழங்கல்

Kogilavani   / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவின் பாலமுனை கிராமத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பொருட்டு கிழக்கு மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சினால் மீன்பிடி தோணிகளும் வலைகளும் வழங்கப்பட்டன.

பாலமுனை ஆழ்கடல் தரைக்கடல் மீனவர் கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் அலுவலகத்தில் வைத்து இவைகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர் எஸ்.ஜெயரூபன் மற்றும் கூட்டுறவு உத்தியோகத்தர் இளங்கோ ஆகியோர் இதனை வழங்கி வைத்தனர்.

நான்கு தோனிகளும், வீச்சு வலைகளும், மீன் பெட்டிகளும் இதன் போது வழங்கப்பட்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .