2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. வர்த்தகர்களுக்கு வர்த்தக வரி சம்பந்தமான கருத்தரங்கு

Super User   / 2011 மே 14 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனமும் மட்டக்களப்பு உள்நாட்டு இறைவரி திணைக்களமும் இணைந்து வர்த்தக வரி சம்பந்தமான கருத்தரங்கொன்றை மட்டக்களப்பு பொது நூலக கேட்பொர் கூடத்தில் இன்று சனிக்கிழமை நடத்தியது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் எம்.செல்வராஜா, இறைவரி திணைக்கள வரியிறுப்பு அதிகாரிகளான ஏ.சுதர்சன், கே.தனரூபன், வர்த்தக சம்மேளன முக்கியஸ்தர்கள், மட்டக்களப்பு வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு உள்நாட்டு இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் என்.எம்.எம்.மிப்லி,

வருமான வரியை வர்த்தகர்கள் ஒரு சுமையாக பார்க்கின்றனர். அவ்வாறான நிலையை மாற்றி நாமும் நாட்டின் அபிவிருத்திக்கு  பங்களிப்புச் செய்கிறோம் என்பதை மனதில் நிறுத்திச் செயற்பட வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .