Super User / 2011 மே 17 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா, ஆர்.அனுருத்தன்)
2600 ஸ்ரீ சம்புத்த ஜெயந்தியை முன்னிட்டு இன்று வாழைச்சேனை மற்றும் கல்குடா பொலிஸ் நிலையங்களில் அன்னதான நிகழ்வு இடம்பெற்றன.
வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஈ.எம்.பி.ஜயவீர தலைமையில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர் சாலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கல்குடா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.வி.சமரசிங்க தலைமையில் நடை பெற்ற அன்னதான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.எச்.ஜி.குரே, ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் அத்துலத் முத்தலி ஆகியோர் கலந்துகொண்டு அன்னதான நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.



31 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
39 minute ago