2026 மே 04, திங்கட்கிழமை

ரயிலில் மோதி ஒருவர் பலி

Kogilavani   / 2012 மார்ச் 16 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித், எம்.சுக்ரி, எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் அரசடி பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நபரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு சிறுகுற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி.ஜயரத்ன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். (படம்:லோஹித்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .