2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஆற்றில் நீராடியவர் மரணம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள சந்திவெளி ஆற்றில் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

திகிலி வெட்டையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை குபேந்திரன் (வயது 31) என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேசன் தொழில் செய்யும் இவர் வழமையாக திகிலி வெட்டையிலிருந்து சந்திவெளி ஆற்றைக்கடந்து கல்குடாவிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்புவது வழக்கமாகும். நேற்றையதினமும் அவ்வாறே இவர் வேலை முடிந்து படகில் வாவியைக் கடந்து ஊர் திரும்பிக்கொண்டிருக்கும்போது நீராடுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார்.

நீண்டநேரமாகியும் கரைசேராத இவரை படகில் சென்று தேடியபோது  சடலமாக மீட்கப்பட்டார்.

நீரில் மூழ்கியதால் சுவாசம் தடைப்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதேச திடீர் மரண விசாரணயதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் மரண விசாரணை நடத்தினார்.

இது பற்றிய விசாரணையை  ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .