2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

உன்னிச்சை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் இனந்தெரியாத குழுவினரால் தீக்கீரை

Super User   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமான உன்னிச்சை, பாலக்கொடிச்சேனை கிராமத்திலுள்ள முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
 
உழவு இயந்திரமொன்றில் வந்த இனந்தெரியாத குழுவினராலேயே குறித்த பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
அத்துடன் குறித்த மீள்குடியேற்ற கிராமத்திலுள்ள நான்கு தற்காலிக குடிசைகள் மற்றும் ஒரு கடை ஆகியனவும் இதன்போது குறித்த இனந்தெரியாத குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன எனவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
 
இதேவேளை, குறித்த கிராமத்தில் வசித்து வந்த 52 வயதான சபினோன என்ற பெண்மனி நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் கோடரியினால் வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
தற்போது குறித்த பெண்மனி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார், விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளுக்காக குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(படங்கள்: நொலேஜ்பெக்ஸ்)

  Comments - 0

  • Ameerudeen Sunday, 12 August 2012 05:37 AM

    யாரெனக் கண்டுபிடுத்து உடனே தண்டனை வழங்கப்பட வேண்டும். இது ஒரு பாரிய கண்டனதுக்குரிய வன்முறைச் சம்பவம். மத ஸ்தலங்கள் அனைத்தும் சமமாக மதிக்கப்படுதல் அவசியம். இவ்வாறான மோசமான செயல்களில் ஈடுபடும் கயவர்களை மக்களிடம் கண்டு பாடம் புகட்ட வேண்டும்.

    Reply : 0       0

    MIM Sunday, 12 August 2012 06:39 AM

    Ware the Muslim Ministers ? Minister Athaullah said before 4 days government protect all Mosque.

    Reply : 0       0

    Hasmeer Sunday, 12 August 2012 08:07 AM

    அதாவுல்லாவுக்கு இதைப்பார்க்கவும் கேட்கவும் நேரம் இல்லை?

    Reply : 0       0

    shan Sunday, 12 August 2012 05:00 PM

    சார் ஃபைசர் முஸ்தபா? வாப்பா நீங்க எங்க ஈக்க்கீங்க?? கொஞ்சம் பாருங்கோ என்ன செய்தி என்டு??? போனகிழம தான் என்ன சொன்னீங்க ??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .