2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசலை ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டனர்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
                                                                                                  (எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை, பாவற்கொடிச்சேனை கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்ட முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலை நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

தற்போது இந்தப் பள்ளிவாசல் மீளவும் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினரும் பொலிஸாரும் வழமை நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, நேற்று சனிக்கிழமை இந்தக் கிராமத்தில் கோடாரியினால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண்மணியையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்று பார்வையிட்டார்.

இதன்போது கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்சா, நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் ஆகியோரும் சென்று பார்வையிட்டனர்.




  Comments - 0

  • rima Sunday, 12 August 2012 11:30 AM

    இதுக்கு நீதி இல்லையா அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களே?

    Reply : 0       0

    umardeen Sunday, 12 August 2012 12:59 PM

    அது சரி தம்புல்லையில் ஆம்பித்து ராஜகிரிய ஒபேசேகரபுர வரைக்கும் உள்ள பள்ளீ வாசல்கள் சம்மந்தமாக வாலைச்சுருட்டிக்கொண்டும்,வாய்க்குள் அவலும் தேங்காயும் வச்சிக்கிட்டிருந்வர்கள் இப்ப என்னவாம் உன்னிச்ச பள்ளீ வாசலுக்கு வரிந்து கட்டிக்கொண்டு சென்றுள்ளார்கள்.......?மக்களே இவர்கள் நம்மள மடயர்கள் எனப்பேய்க்காட்டுகிறார்கள்.....

    Reply : 0       0

    Maattrem Sunday, 12 August 2012 01:53 PM

    றிமா, காயத்துக்கா பள்ளியை எரித்ததுக்க? இந்த நாட்டில் எதுவும் எல்லையை மீறிவிட்டது.

    Reply : 0       0

    jesmin Sunday, 12 August 2012 02:50 PM

    வருவார் ,பார்ப்பார். அறிக்கை விடுவார் போய்விடுவார் இ னி அடுத்த தேர்தலில்தான் சந்திக்கலாம்.

    Reply : 0       0

    east bird Sunday, 12 August 2012 08:38 PM

    ரிமா .... எப்புடி...... வாய்க்கு பூட்டு போட்டுடாங்களே.....

    Reply : 0       0

    Maatturan Monday, 13 August 2012 02:54 AM

    ஹக்கிமுக்கு எலெக்ச‌குனுக்கு துரும்பு கிடைத்து விட்டது. இன்னும் நல்லா எசு தலைவா. யாரு குடி கெட்டலும் கட்சஜக்கு வாகு வெனும். எப்படியெல்லம் புலி இல்லததால கொலயும் இல்ல. நமக்கு வாகு கேட்க வேறு மார்க்கமும் தெரியல்ல.

    Reply : 0       0

    jameel Monday, 13 August 2012 11:48 AM

    நீதிக்கே நீதி கிடைக்க மாட்டேங்குது . நீங்க வேற

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .