2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

நான் புலி அல்ல, கட்சி தாவாத கொள்கைவாதி; ஹிஸ்புல்லாவுக்கு அரியநேத்திரன் எம்.பி பதில்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

'தேர்தலுக்காக மேடைகளில் பொய்த் தகவல்களை கூறுவது சிறந்ததல்த. அரியநேத்திரன் எம்.பி புலிகளை விட கூடிய பயங்கரவாதி எனவும் அவர் பெரிய புலி எனவும் ஹிஷ்புல்லா கூறியுள்ளார். நான் அவருக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். நான் புலி அல்ல. தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் கட்சிவிட்டு கட்சிதாவாத கொள்கைவாதி' என்று பா.அரியநேத்திரன் எம்.பி கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளைக் காரியாலயமொன்று பழுகாமத்தில் வேட்பாளர் வெள்ளிமலை தலைமையில் திறந்து வைக்கப்பட்டபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அரியநேத்திரன் எம்.பி மேற்கண்டவாறு கூறினார்ஃ.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இனம் நசுக்கப்படும் போது குரல் கொடுக்கும் அரசியல்வாதி நான். நான் இறந்தால் என்னைப் போல் இன்னுமொருவன் இம்மண்ணில் பிறப்பான் என்பதை ஹிஷ்புல்லா புரிந்துகொள்ள வேண்டும். மனிதனுக்கு தலைவிதி உண்டா என்பது எனக்குத்  தெரியாது. ஆனால் தமிழனுக்கு தலைவிதி உண்டு. அது 'அ' என்கின்ற அகிம்சை போராட்டம். இது தோல்வி கண்டது. இது தந்தை செல்வாவினால் எடுத்துச் செல்லப்பட்டது.

இதன் பின் 'ஆ' என்கின்ற ஆயுதப் போராட்டம். இது முள்ளிவாய்க்காலுடன் முடிவுபெற்றது. தற்போது நடப்பது 'இ' என்கின்ற இராஜதந்திர போராட்டம். இது சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தது 'ஈ' என்கின்ற ஈழம். அடுத்தது 'உ' என்கின்ற உலகம் அங்கீகரிக்கும்.

பிரதியமைச்சர் ஹிஷ்புல்லா கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் மூன்று முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படுவர் என தெரிவித்திருக்கின்ற நிலையிலும், முஸ்லிம் ஒருவர்தான் முதலமைச்சர் என தெரிவித்திருக்கின்ற நிலையிலும் எவ்வாறு தமிழ் வேட்பாளர்கள் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சராக வரமுடியும்? என்றார்.

  Comments - 0

  • Aranejjan Thursday, 30 August 2012 02:34 AM

    ஹிஸ்புல்லாவின் பதிலை எந்த எழுத்தில் இருந்து ஆரம்பிக்கிறார் என பொறுத்திருந்து பார்ப்போம். இரண்டும் சிறந்த தந்தி(ந)ரிகள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .