2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பின் சில இடங்களில் நாளை மின்வெட்டு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின்  9 இடங்களில் நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் 5 மணிவரை மின்துண்டிப்பு இடம்பெறுமென இலங்கை மின்சாரசபையின் மட்டக்களப்பு மின்பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மின்சாரசபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக இம்மின்துண்டிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவ் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

லேக் வீதி, நல்லையா வீதி, வைத்தியசாலை வீதி, புதூர், திமிலைதீவு, வலையிறவு, வவுணதீவு தொடக்கமும் தாண்டியடி மற்றும் வவுணதீவு தொடக்கமும் நாவற்காடு ஆகிய பிரதேசங்களில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .