2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஏறாவூரில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 13 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார், ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் இன்று வியாழக்கிழமை காலை பலியாகியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் ஓடாவியார் வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முகமட் இர்பான் (வயது 22) என்பவரே இவ்வாறு பலியானவராவார்.

இவர் வீடொன்றில் தொழிலில் ஈடுபட்ட வேளையில்  மின்சாரத் தாக்குதலுக்குள்ளானதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

இவர் காலில் செருப்பு அணிந்திருக்கவில்லையெனவும்; இவ்வீட்டின் மாடியில் நீர் தேங்கி நின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எஸ்.ஏ.சி.பழில் பிரேத பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பித்த நிலையில், இப்பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட மரணமெனக் கூறினார்.
சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் அவர் பொலிஸாருக்கு கூறினார்.

  Comments - 0

  • ihsan Thursday, 13 September 2012 09:37 AM

    இன்னகலில்லஹி வைஇலைஹி வைன்னைல்லஹி ராஜிஊன் இவன் பாடசாலை நண்பரும்கூட அல்லாஹ் சுவர்கத்தை கொடுப்பானாக‌.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .