2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சுகாதாரம் பேணாத பேக்கரிகள், ஹோட்டல்கள் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதாரம் பேணாத ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மட்டக்களப்பு மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபைப் பகுதியில் இயங்குகின்ற  ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளின் உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மட்டக்களப்பின் கல்லடி பொதுசுகாதார பரிசோதகர் கே.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநர பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை உட்பட சுகாதார அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தற்போதைய சூழ்நிலையில் இம்மாவட்டத்திற்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஹோட்டல்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகரித்துள்ளன. இந்நிலையில், சுகாதாரத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதிகமான ஹோட்டல்கள் செயற்படுவதாக புகார்கள் கிடைப்பதாகவும்  மட்டக்களப்பு மாவட்ட சுகாதாரப் பிரிவினர் கூறியுள்ளனர்.

  Comments - 0

  • hafeel Thursday, 20 September 2012 07:14 AM

    மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சுகாதாரப் பரிசோதக நிலையங்கலின் தொலைபேசி இலக்கங்களை விளம்பரம் செய்தால் மக்கள் உனவில் குறை கானும் பட்சத்தில் தகவல் தர வசதியாய் இருக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .