2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

புல் வேளாண்மை ஊக்குவிப்புத் தினம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 01 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் 'புல் வேளாண்மை ஊக்குவிப்புத் தினம்' வாழைச்சேனை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

பால் நுகர்வினை அதிகரிக்கும் நோக்குடன் நல்லினப் புற்களை நட்டு அதனூடாக கால் நடைகளின் உணவுத் தேவைகளை தரிசு நிலங்களில் இருந்த பெற்றுக்கொள்வதற்காக புல் வளர்ப்பினை ஊக்குவிக்கும் திட்டத்தில் பண்ணையாளர்களுக்கு நல்ல இன புல் வேளாண்மை வழங்கப்பட்டதுடன், வாழைச்சேனை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவில் சிறந்த கால் நடைப் பண்ணையாளர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கால் நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஈ.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை கால்நடை வைத்திய அதிகாரி டி.ரீ.வின்சன், ஓட்டமாவடி கால்நடை வைத்திய அதிகாரி ஆர்.டி.எம்.எச்.மதுமாலா, வாழைச்சேனை சமுர்த்தி மகாமைத்துவப் பணிப்பாளர் தேவ மனோகரி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .