2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மு.கா உறுப்பினர் இராஜினாமா

Kogilavani   / 2012 நவம்பர் 27 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                                     (எம்.சுக்ரி)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கே.எல்.அக்கீல் அர்சாத் தனது நகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஏறாவூர் நகர சபையின் கடந்த மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்காத நிலையிலிருந்த மேற்படி ஏறாவூர் நகர சபை உறுப்பினர் அக்கீல் அர்சாத் தனது இராஜினாமா கடிதத்தை நேற்று அனுப்பி வைத்துள்ளதாக ஏறாவூர் நகர சபை செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட்டு அவர் நகரசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .