2026 மே 04, திங்கட்கிழமை

'பொதுப்பலசேனா ஊடாக உணவில் கைவைத்த அரசாங்கம் முஸ்லிம்களின் உடையிலும் கை வைத்துள்ளது'

Kogilavani   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 02:47 - 2     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'பொதுப்பலசேனா  ஊடாக முதலில் உணவில் கை வைத்த அரசாங்கம் முஸ்லிம்களின் உடையிலும் கையை வைத்திருக்கிறது. அடுத்தது உறையுள் என்ற வகையில் அதுவும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

'முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சுக்கள் அனைத்தையும் தருகிறோம். கிழக்கில் ஆட்சியமைப்பிற்கு வாருங்கள் என்று முஸ்லிம்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பை மறந்து றிசாத் பேசியிருக்கிறார்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

'தமிழ் பேசும் சமூகங்கள் ஒற்றுமை குறித்து சம்பந்தன் ஐயா எங்களோடு பேச முன்வரவேண்டும்' என்று கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பின் உறுகாமத்தில் அமைச்சர் றிசாத் உரையாற்றியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'கிழக்கு மாகாண தேர்தல் முடிந்தவுடன் முதலமைச்சர் பதவியையும் தேவைப்பட்டால் அமைச்சுக்கள் அனைத்தையும் தருகிறோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அழைப்பு விடுத்தார்.

இருந்தபோதும் அதனைப் பொருட்படுத்தாது முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் ஆட்சி அமைத்துக் கொண்டது. இந்த விடயம் ஞாபகத்தில் இல்லாததுபோல் அமைச்சர் றிசாத் பதியுதீன் உறுகாமத்தில் உரையாற்றியிருக்கிறார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தற்போதுதான் நம்பிக்கையற்ற நிலை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வந்திருக்கிறது என்பது கவலைக்குரியதுதான்.

அதனை தமிழர் தரப்பு எப்போதோ உணர்ந்து விட்டது. அதனால்தான் சிறுபான்மை இனங்களின் ஒற்றுமை தொடர்பில் பல தொடர் முயற்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட வண்ணமிருக்கிறது.

ஒரு மனிதனுக்கு முக்கிய தேவைகளாக உணவு, உடை, உறையுள் என்பனவே அமைந்திருக்கின்றன. பொதுப்பலசேன ஊடாக முதலில் உணவில் கை வைத்த அரசாங்கம் முஸ்லிம்களின் உடையிலும் கையை வைத்திருக்கிறது. அடுத்தது உறையுள் என்ற வகையில் அதுவும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.

தமிழர்கள் சிறுபான்மை இனங்களின் ஒற்றுமைக்காக எதனையும் விட்டுக் கொடுப்பதற்கும் இழப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன.

இவற்றினை மறந்து முஸ்லிம் தலைவர்கள் கருத்துக்கள் வெளியிடுவதை தவிர்க்கவேண்டும்' என்றார்.

  Comments - 2

  • jowfer Tuesday, 02 April 2013 06:48 AM

    பாராளுமன்ற உறுப்பினராக (1988 - 1994) இருந்த காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அன்றைய ஜனாதிபதி றணசிங்க பிறேமதாஸாவிடம் காசு வாங்கி தமிழ் சமூகத்தின் பாரம்பரிய பூமியை பிரிக்க நினைத்த நீங்கள் எல்லாம் தமிழரின் உணர்வு பற்றி பேசுகிறீர்கள். இது வேடிக்கையாக இல்லையா?

    Reply : 0       0

    vallarasu Tuesday, 02 April 2013 07:35 AM

    தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குக் காரணம் ஆப்பிழுத்த குரங்குதான். இந்த குரங்கு மரம் விட்டு மரம் பாயாவிட்டால் ஒருபிரச்சினையும் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .