2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

போதைப்பொருள் மீட்பு; சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள குளிர்பான நிலையமொன்றிலிருந்து போதைப்பொருளை கைப்பற்றிய காத்தான்குடி பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில்   குளிர்பான நிலைய உரிமையாளரையும் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை இரவு தங்களுக்கு  கிடைத்த தகவலைத் தொடர்ந்து அந்தக் குளிர்பான நிலையத்திற்குச் சென்று தேடுதல் நடத்தியதாகவும் இதன்போது போதைப்பொருளை கைப்பற்றியதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேக நபரை  மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X