2025 மே 05, திங்கட்கிழமை

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன, பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக்;குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது சிவில் பாதுகாப்புக் குழுக்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், சிவில் பாதுகாப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X