2025 மே 05, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள பாலமுனைக் கிராமத்தில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும்; ஒருவரை  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், சந்தேக நபரிடமிருந்து 764 கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X