2025 மே 05, திங்கட்கிழமை

வெளிநாட்டுச் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக்குடியில் வெளிநாட்டுச் சிகரெட்டுக்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை இன்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுக்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபரின் வீட்டையும் கடையையும் சோதனையிட்டபோது, வெளிநாட்டுத் தயாரிப்பான 60 சிகரெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X