2025 மே 02, வெள்ளிக்கிழமை

நகையுடன் பெண் கைது

Super User   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருடப்பட்ட நகைகள் சனிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்னும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எம்.பி.எம்.தாஹா மற்றும் டபள்யு.எம்.எல்.எஸ். சஞ்சீவ ஆகியோருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சந்தேக நபரான பெண் 38 கிராம் தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பொருப்பதிகாரி ஏ.ஜி.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேசத்தில் ஒரு வீட்டில் பதினைந்து பவுனுக்கும் அதிகான நகைகள் களவு போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பட்டு செய்யப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டார்.

இதனை அடுத்தே மேற்படி பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் வாழைச்சேனை, ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி போன்ற பகுதிகளில் விற்கப்பட்ட நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வேறு எங்கு விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பொருப்பதிகாரி ஏ.ஜி.பி.புஸ்பகுமார தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட தங்கம் நகைகள் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .