2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஹோமியோபதி வைத்திய சிகிச்சை முகாம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் மாற்று மருத்துவமுறைகள் எனும் தொனிப்பொருளின் கீழ் ஹோமியோபதி வைத்திய சகிச்சை முகாம் ஒன்று புதன்கிழமை (19) மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை மகாத்மா காந்தி நிலையம், சிலோன் ஹோமியோபதி மெடிக்கல் அஸோஸியேசன், வடக்கு கிழக்கு நல்லிணக்கத்திற்கான சர்வமத ஒன்றியம் ஆகிய பங்காள அமைப்புக்ளுடன் இணைந்து கதிரவன் அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் 'முஸ்லிம் எய்ட்' நிறுவனம் இதனை நடத்தயிருந்தது.

கதிரவன் அமைப்பின் அமைப்பின் தலைவர் ப.இன்பராசா தலைமையில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவப்பரியா-வில்வரெத்தினம், முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் முகாமையாளர் ரி.சலீம் அப்துல், இலங்கை மகாத்மா காந்தி நிலையத்தின் தலைவர் எம்.ஏ.எம்.சலீம் மற்றும் ஆலய மதகுருமார் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஹோமியோபதி வைத்திய சிகிச்சை நிபுணர்களான வைத்தியர் எஸ்.விஜயநாயகம், வைத்தியர் பிரேமதாச ஆகியோர் கலந்துகொண்டு  மக்களுக்கு ஹோமியோபதி வைத்திய சிகிச்சையின் பலாபலன்கள் பற்றி விளக்கமளித்ததோடு சிகிச்சையும் வழங்கினர்.

இப்பகுதி மக்களின் நலன் கருதி மாதாந்தம் இவ் வைத்திய சிகிச்கை முகாம் மேற்கொள்ளத் திட்மிடப்பட்டுள்ளதாக முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் முகாமையாளர் ரி.சலீம் அப்துல்    இதன்போது தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X