2025 மே 03, சனிக்கிழமை

வைத்தியசாலைக்கு அருகிலுள்ள குளத்தை சுத்தம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: வைத்திய அத்தியட்சகர்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள குளத்தை திருத்தி சுத்தம் செய்வதற்கு மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனினால் இரண்டுகோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன்  தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள குளமானது கடந்த பல வருட காலமாக கவனிப்பாரற்று அசுத்தமாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக அருகாமையில் உள்ள வைத்தியசாலை மற்றும் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை ஆகியவற்றுக்கு வருகின்ற பொதுமக்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள். இது தொடர்பாக கடந்த காலங்களில் எவரும் கவனம் எடுத்ததாக தெரியவில்லை.

அசுத்தமான இக் குளமானது களுவாஞ்சிகுடி நகரத்தின் அழகிற்கு பெரும் இழுக்காக இருக்கின்றமையும், நோயைக் குணமாக்க வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு பல்வேறு விதங்களில் இடஞ்சலாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனினும் அண்மையில் நடைபெற்ற களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் இதன் அபிவிருத்தி தொடர்பாக இறுக்கமான ஒரு வேண்டுகோளை விடுத்தேன் .

பிரதியமைச்சர் முரளிதரன் நகர அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்பு கொண்டு இதற்கென இரண்டு கோடி ரூபா நிதியினை நகர அபிவிருத்தி அமைச்சிடமிருந்து ஒதுக்கீடு செய்துள்ளதாக தன்னிடம் தெரிவித்ததாக வைத்திய அத்தியட்சகர் கு. சுகுணன்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X