2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Kogilavani   / 2014 மே 06 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மாவட்டத்தின் வவுனதீவு பிரதேச செயலத்தில் திங்கட்கிழமை(5) சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று நடைபெற்றது.
சிறுவர் பாதுகாப்பு மற்றும் இள வயதினருக்கான உள சமூக உதவி வழங்கள் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் விழிப்புணர்வு செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வோர் சைல்ட் கோலாண்ட நிறுவனத்தின் அனுசரணையுடன் எஸ்கோ நிறுவனத்தினால் இத் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தன் கீழே மேற்படி செயலமர்வு நடைபெற்றது.

வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ஸ்பிரித்தியோன், திட்ட இணைப்பாளர் கே.சிவாகரன், திட்ட உதவியாளர்களான ரி.ததீஸ்வரன், ஆர்.கிங்ஸ்லி மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பிரபாகரன் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

இதன்போது சிறுவர் பாதுகாப்பு தொடர்பாகவும் இள வயதினருக்கான உள சமூக உதவி வழங்கள்  தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X