2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தேர்தலில் மட்டு. மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களித்துள்ளனர்: சசிதரன்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 09 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

கடந்த தேர்தல்களை விட, இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணர்வுபூர்வமான முறையில் வாக்களித்திருந்தமை சிறப்பம்சம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் தெரிவித்தார்;.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஐ.தே.க. வின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரனிடம் இன்று வெள்ளிக்கிழமை (09)  தொடர்புகொண்டு வினவியபோதே, அவர் மேற்;கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு நாம் தலை வணங்குகின்றோம். அதற்காக வேண்டி எமது கட்சி சார்பாக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது பொதுவேட்பாளர் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தல்களை விட, இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணர்வுபூர்வமான முறையில் வாக்களித்திருந்தமை சிறப்பம்சமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம், நிர்வாகம், கைத்தொழில் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக எதிர்காலத்தில் நாம் பாரிய அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.  எதிர்காலத்திலும் மட்டக்களப்பு மக்கள் தொடர்ந்து எமது பக்கம் இருந்து பாரிய ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X