2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம்: த.ம.வி.பு

Thipaan   / 2015 ஜனவரி 10 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம். நூர்தீன்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் அளித்துள்ள ஜனநாயக ரீதியிலான தீர்ப்பை ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட பொறுப்புமிக்க அரசியற் கட்சி என்றமுறையில் மதிப்பளித்து அத் தீர்ப்புக்;கு தலைவணங்குகின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், வெள்ளிக்கிழமை (09) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாற்றம் வேண்டும் என்ற தேசிய அலையில் தமிழ் மக்களும் உள்வாங்கப்பட்டு சில யதார்த்தங்களை புறக்கணித்துவிட்டு எம் மக்கள் அளித்துள்ள மாற்றத்துக்கான இத் தீர்ப்பானது, எம் மக்கள் எதிர்பார்க்கின்ற அம் மாற்றத்தை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விலும் அபிவிருத்தியிலும் ஏற்பட வேண்டும் என நாமும் விரும்புகின்றோம்.

மாற்றத்தை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு மத்தியில் எம் கட்சிக்கு மதிப்பளித்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமக்காக வாக்களித்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 35,000 ஆயிரம் தமிழ் வாக்காளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

அமைய இருக்கின்ற தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அமைச்சுப் பதவிகளை ஏற்று, இணக்கப்பாட்டு அரசியலினூடாக தமிழ் மக்களுக்கு காத்திரமான சேவையை ஆற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்  என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X