2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஜனவரி 16 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


தைப்பொங்கலை முன்னிட்டு மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மதுரங்குளம், குஞ்சன்குளம் ஆகிய கிராம மக்களுக்கு, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை, வியாழக்கிழமை (15) உணவுப் பொருட்கள் வழங்கி வைத்தது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக இவற்றை வழங்கி வைத்தார்.

சுவிடன், ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் மற்றும் அவுஸ்ரேலியா மனிதநேய அன்பர்களின் நிதி உதவியுடனேயே இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சுவிடன், ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் வழங்கிய 68,000 ரூபாய் நிதி உதவியில் 97 குடும்பங்களுக்கும், அவுஸ்ரேலியா, மனிதநேய அன்பர்கள் வழங்கிய 80,000 ரூபாய் நிதி உதவியில் 105 குடும்பங்களுக்கும் உணவுப் பொருட்கள் பொருட்கள் வழங்கப்பட்டன.

அரிசி, சீனி, தேயிலை, கோதுமை மா, பருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 202 உணவுப் பொதிகள் இதன்போது வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X