2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஒரு தசாப்தத்தின் பின் நாமகள் வித்தியாலயம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2015 ஜனவரி 20 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


வா.கிருஸ்ணா


மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் பத்து வருடமாக மூடப்பட்டிருந்த நாவலடி நாமகள் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை(19) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.

2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் காரணமாக இப்பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 10 வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுனாமிக்கு பின்னரான காலத்தில் இப்பகுதியை சேர்ந்த மக்கள், மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த காரணமாக இப்பாடசாலை இயங்கமுடியாத நிலையிருந்தது.

எனினும் இப்பகுதி மக்களில் பலர் படிப்படியாக இப்பகுதியில் குடியேறிவருவதன் காரணமாக இப்பிரதேச மாணவர்கள் நீண்ட தூரம் பாடசாலைக்கு செல்லவேண்டிய நிலையேற்பட்டது.

இந்த நிலையில் இதுதொடர்பில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரனால் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இப்பாடசாலைக்கான புதிய கட்டிடம் அமைக்கப்பட்டதுடன் பாடசாலையினை மீள ஆரம்பிப்பதற்கான வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்கீழ் இந்த பாடசாலை இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் முதல் கட்டமாக 30 மாணவர்கள் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் தொகை அதிகரிக்கும் வரை இப்பாடசாலை கனிஷ்ட பாடசாலையாக செயற்படும் என மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சுகுமாரன் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X