Suganthini Ratnam / 2015 ஜனவரி 21 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர், கணேசபுரம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் மூன்று பேரை புதன்கிழமை (21) கைதுசெய்ததாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மண்டூர், கணேசபுரம் பிரதேசத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, மேற்படி இடத்துக்கு சென்றபோதே சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இதன்போது பெக்கோ இயந்திரம் ஒன்றையும் டிப்பர் இயந்திரம் ஒன்றையும் மற்றும் விற்பனைக்காக சேகரித்துவைக்கப்பட்டிருந்த பெருமளவான மணலையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் கூறினர்.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025